Saturday, June 20, 2009

உன் மழலை மொழி தாராயோ ?





















உன் பிஞ்சு விரல்களின் மென்மையை,
நான் ,
பல வண்ணம் கொண்ட மலரிலும்
சூழ்ந்து வந்த மேகத்திலும்
பனி பொழியும் வானத்திலும் தேடினேன்

பூமி உருண்டையாம்
இப்பக்கம் துளை போட்டால்
அப்பக்கம், உன் வீடு வருமா ?
என்று கூகுளில் தேடினேன்

இப்போதெல்லாம் நான் எதையும்
மனப்பாடம் செய்வதில்லை
என் மனதில் நீ இருக்கும் இடத்தில்
அது பதிந்து விடுமோ என்ற பயத்தில்

எனக்கு ஆறுதல் சொல்ல
உன் புகைப்படம் அனுப்பினாள்
உன் அம்மா , கிறுக்கு
நிலவின் படம் காட்டினால்
மலருமா மல்லிகை ?

உன் கை ரேகையில்
என் முத்தம் கலக்க
எத்தனித்து , என் இதழில்
தேன் சுரக்கிறது

கண்ணா , கிருஷ்ணா
அன்று நான் என் வீட்டு தரையில்
வரைந்தது உன் பாத சுவடுகளோ ?
இருக்கும் , அதில் அத்தனை சுவையாம்
எறும்புகள் சொல்லக் கேட்டேன்

எனக்குத் தெரியும்
தமிழை விட உன் மழலையில்
இந்தக் கவிதைக்குச் சுவை அதிகம்
உன் மழலை மொழி தாராயோ ?

உதவி : ஜனனி

I dont't miss him

I smell him
In the morning flower

I feel him
In the gentle breeze

I hear him
In birds orchestra

I see him
In nature

He is more closer to me
than ever before

YES,I know
He is thinking about me

Suddenly i don't miss him.
MY son